Skip to main content

கரையான்களால் பறிபோன கனவு - கதறிய வியாபாரி!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

MONEY EATEN BY TERMITES

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலயா. இவருக்கு வயது 52. பன்றி வளர்ப்பு தொழில் செய்து வரும் இவருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே கனவு.

 

வங்கி கணக்கு இல்லாத இவர், தனது கனவை நினைவாக்க சம்பாதித்தப் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க எண்ணி, வீட்டிலேயே இரும்பு பெட்டி ஒன்றில் சேமித்து வந்துள்ளார். இவ்வாறு ஐந்து லட்சம் வரை அப்பெட்டியில் சேமித்துள்ளார். இந்தநிலையில் தனது தொழிலில் முதலீடு செய்வதற்காக, அச்சேமிப்பு தொகையிலிருந்து ஒரு லட்சத்தை எடுப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

 

சொந்த வீடு கட்ட அவர் சேர்த்து வைத்திருந்தப் பணத்தைக் கரையான்கள் அரித்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தரையில் விழுந்து கதறி அழுதார். பிறகு கரையான்கள் அரித்த நோட்டுகளை, அப்பகுதி குழந்தைகளுக்கு அளித்துள்ளார். குழந்தைகளின் கையில் பணத்தைப் பார்த்தவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்