Skip to main content

" டிசிஎஸ்" நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைக்கடிகாரம் பரிசு!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

" TATA CONSULTANCY SERVICES" - TCS நிறுவனம் வெற்றிகரமாக 50 ஆம் ஆண்டு நிறைவடைக்கிறது. இந்நிறுவனம் ஆனது "TATA GROUPS" குழுமத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இவை இந்தியா மற்றும் உலக அளவில் மென்பொருள் துறையில் அதிக வளர்ச்சியை அடைந்து தற்போது மென்பொருள் துறையில் சிறந்த நிறுவனமாக  முன்னிலை வகிக்கிறது. அதே போல் அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட "TCS" நிறுவனத்தின் கிளைகள் உள்ளனர். 

 

tcs



எனினும் தற்போது டிசிஎஸ் நிறுவனம் தொடங்கி 50 ஆம் ஆண்டுகள் நிறைவடைதை அடுத்து டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுடன் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி திரு. ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் கூறுகையில் ஊழியர்கள் அனைவருக்கும் "TITAN WATCH" கள் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும்  பரிசு வழங்கி டிசிஎஸ் நிறுவனத்தின் 50 -வது ஆண்டை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார். 

tcs



அதைத் தொடர்ந்து டிசிஎஸ்யில் பணியாற்றும் அனைவருக்கும் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் டாடா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  "TATA" நிறுவனம் ஆனது மற்ற துறைகளில் சற்று பின் தங்கி இருந்தாலும் "டிசிஎஸ்" மென்பொருள் நிறுவனம் முன்னேறி வருகிறது என்றால் மிகையாகாது.


பி.சந்தோஷ்.சேலம்.
 

சார்ந்த செய்திகள்