Skip to main content

இராமன் - இராவணன் நாடுகள் ஒப்பீட்டை ட்வீட் செய்த சுப்ரமணிய சுவாமி!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

subramaniyan swamy

 

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று (01.02.2021) தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் புதிதாக பெட்ரோல், டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் பாஜக எம்.பி சுப்ரமணிய சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் பெட்ரோல் விற்கும் விலையை, அண்டை நாடுகளுடன், இராமாயணத்தின் அடிப்படையில், ஒப்பிடும் வகையிலான தகவல் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

 

இராமனின் இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், சீதையின் நேபாளத்தில் 53 ரூபாய், இராவணனின் இலங்கையில் 51 ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவிற்கு பாஜக ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அவரது பதிவிற்கு ஆதரவாக, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்