Skip to main content

பாலியல் புகார் - விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைப்பு

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
Rajnath-Singh



பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு புகார்களை விசாரிக்க சட்ட வழிமுறைகளை வகுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மீடூ -வில் பாலியல் தொந்தரவு குறித்து பதிவிடப்படும் நிலையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 

சட்டங்களில் திருத்தம் தேவைப்பட்டால் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை செய்யும். மேலும், தற்போதைய சட்டங்களை வலுப்படுத்துவதற்கான யோசனைகளை குழு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்