Skip to main content

பனிச்சரிவில் சிக்கிய 7 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

arunachalpradesh

 

அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதியான காமெங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 இராணுவ வீரர்கள் கடந்த 6 ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கினர். இதனைத்தொடர்ந்து இந்திய இராணுவம், பனிச்சரிவில் சிக்கிய ஏழுபேரையும் மீட்க, தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டது. தேடல் பணிக்காக சிறப்பு குழுக்கள் விமானம் மூலம் காமெங் பகுதியில் தரையிறக்கப்பட்டன.

 

இந்தநிலையில் பனிச் சரிவில் சிக்கிய 7 இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. அந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்