Skip to main content

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ், பாஜக வெளிநடப்பு

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
walks outs

 

 

சபாிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்படும் என்ற கேரளா அரசின் நிலைப்பாட்டை கண்டித்து ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் பா.ஜ.க வெளியேறியதால் சபாிமலை விவாகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

 

மண்டல மகர பூஜைக்காக சபாிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுதினத்தில் இருந்து பக்தா்கள் சபாிமலையில் அனுமதிக்க பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பின் படி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளாைஅரசின் நிலைப்பாடு குறித்து இன்று முதல்வா் பினராய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 

இதில் தேவசம் போா்டு மந்திாி கடகம் பள்ளி சுரேந்திரன், எதிா்கட்சி தலைவா் (காங்கிரஸ்) ரமேஷ் சென்னிதல, காங்கிரஸ் மாநிலதலைவா் முல்லம்பள்ளி ராமசந்திரன், பா.ஜ.க மாநில தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

இதில் உச்சநீதிமன்றம் உத்தரவை கேரளா அரசு அமல் படுத்த உள்ளது என்றும் மேலும் சபாிமலைக்கு வர விரும்பும் அனைத்து வயது பெண்களுக்கும் முறையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க தயாராக இருக்கிறது என்றும் இதே போல் பெண்களின் பாதுகாப்புக்காக பெண்  போலிசாரும் சபாிமலையில் பணி அமா்த்த பட இருப்பதாவும் பினராய் விஜயன் கூறினாா்.

 

இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக உச்சநீதி மன்றம் மறுசீராய்வு மனு மீதான விசாரணையை ஜனவாி 22-ம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதால் இந்த மண்டல காலத்தில் குறிப்பிட்ட வயது உடைய அந்த பெண்களை அனுமதிக்க கூடாது என்றும் சீராய்வு மனு மீதான தீா்ப்புக்கு பிறகு அரசு அடுத்த நடவடிக்கை எடுக்க வேணடும் என்று கூறினாா்கள்.

 

இதற்கு பினராய் விஜயன் முடியாது என்றும் அல்லது பெண்கள் ஓரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் செல்லும் வகையில் அதை உறுதி படுத்துவோம் என்றாா். அரசு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ், பாஜக கூறியது. ஒருமதத்தின் ஆச்சாரங்களிலும் விசுவாசத்திலும் தலையிடுவதற்கு அரசுக்கு உாிமையில்லை என்று கூறி அரசின் நிலைபாட்டிற்கு எதிா்ப்பு தொிவித்து காங்கிரசும் பாஜகவும் கூட்டத்தில் இருந்து வெளியேறியது. 

 

இதனால் கூட்டம் பாதியிலேயே நின்றது. இந்த நிலையில் சபாிமலை விவகாரம் மீண்டும் ஓரு பதட்டத்தை தொற்றி கொண்டிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார்.