Published on 25/06/2020 | Edited on 25/06/2020

"நாளை மற்றும் நாளை மறுநாள் வடகிழக்கு மாநிலங்களில் அதிகனமழை பெய்யும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.