Skip to main content

ரஃபேல் போர் விமானங்கள் இன்று விமானப்படையில் சேர்ப்பு!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

rafale fighter aircraft ambala air force station in haryana

 

 

பிரான்ஸின் 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று (10/09/2020) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன.

 

ஹரியானா மாநிலம், அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார். மேலும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

 

லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில், இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்