Published on 21/04/2022 | Edited on 21/04/2022

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார். அங்கிருந்து இன்று மாலை டெல்லி கிளம்பும் அவர், நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளார்.
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.