Skip to main content

” இது இந்திய விளையாட்டு உலகிற்கு சிறப்பான தருணம்” - பிரதமர் மோடி பாராட்டு

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Neeraj Chopra

 

அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ராவிற்கு நாடு முழுவதுமிருந்து வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நீரஜ் சோப்ராவை பாரட்டியுள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள் நீரஜ் சோப்ரா. இது இந்திய விளையாட்டு உலகிற்கு சிறப்பான தருணம். நீரஜ்ஜின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்