Skip to main content

வேலைக்குவராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து அடிக்கும் வைரல் வீடியோ!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு வராததால் ஆத்திரம் அடைந்த பெட்ரோல் பங்க் முதலாளி ஊழியரை கட்டிவைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மத்திய பிரதேசத்தில் ஹோஷங்காபாத்தில் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்துவரும் ஒரு ஊழியர் ஒரு வாரத்திற்கு மேல் விடுப்பு எடுத்துள்ளார். அதனை கண்டிக்க முதலாளி அந்த ஊழியரை பெட்ரோல் பங்கிலுள்ள ஒரு தூணில் கட்டிப்போட்டு கடுமையாக அடித்துள்ளார். அப்படி தாக்கும்பொழுது ஊழியர் தனக்கு காலில் அடிபட்டது எனவேதான் என்னால் வேலைக்கு வரமுடியவில்லை என விளக்கம் கூறுகிறார். ஆனால் அதையும் பொருட்படுத்தமால் அந்த முதலாளி அந்த ஊழியரை தாக்குக்கிறார்.

 

இந்த காட்சியை அருகிலுள்ள மற்ற ஊழியர் வீடியோவாக பதிவுசெய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த தாக்குதல் வீடியோ பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து சரமாரியாக அடித்த அந்த முதலாளி மற்றும் மேலும் ஒருவர் என இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Gasoline tank roof collapse incident

 

சென்னையில் பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மழையின் போது வீசிய காற்றால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூரையின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.