Skip to main content

பாகிஸ்தான் சிறையில் இருந்த 55 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

இந்திய மீனவர்கள் சர்வதேச விதியை மீறி எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி பாகிஸ்தான் கடற்படையினர் சுமார் 55 மீனவர்களை கைது செய்தனர். இந்நிலையில் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற இந்திய மக்கள் ஐந்து பேர் உட்பட் சுமார் 60 இந்தியர்களை பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லையான "அட்டாரி வாகா எல்லையில்" இந்திய அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தது. 
 

pakistan jail



இதனையடுத்து இந்திய அதிகாரிகள் மீனவர்களை அழைத்து அமிர்தசரஸ் பகுதியில் உள்ள முகாமில் தங்க வைத்து  , "Indian Red Cross Society" என்ற அமைப்பு மூலம் உணவுகள் வழங்கி வருகின்றனர். இவர்கள் விரைவில் அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்