Skip to main content

”திருமணமாகி கைவிடப்பட்ட பெண்களுக்கும் சட்டம் கொண்டுவாருங்கள்” - மோடியை வம்பிழுக்கும் ஒவைஸி

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
owaisi

 

இன்று காலை மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது அதற்கு அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு அவசரச்சட்டம் கொண்டுவர ஒப்புதல். முத்தலாக் தடை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்து அவசரச்சட்டமாக வெளியிட ஒப்புதல் வழங்கப்பட்டது.
 

இந்நிலையில், இதற்கு எதிராக மக்களவை உறுப்பினர் அசாவுதின் ஒவைஸி, “ நான் பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன். இந்த இந்தியாவில் திருமணமாகி கைவிடப்பட்ட பெண்களுக்கு என்று ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும், அது போன்று 24 லட்சம் பேர் இங்கு இருக்கிறார்கள். திருமணம் மட்டும் செய்ட்துவிட்டு, அவர்களை பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆவணத்தில் மட்டும் அவர்கள் பெயரை சேர்க்கிறார்கள்” என்று முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக கூறியுள்ளார்.
 

மேலும் அவர், ”இது இசுலாமிய பெண்களுக்கு எதிராக இருக்கின்றது. இந்த அவசரச்சட்டத்தால் இசுலாமிய பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இசுலாத்தில் திருமணம் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று, அதில் தவறுகள் இருந்தால் தண்டனை வழங்க வேண்டும். இந்த மசோதா கட்டமைக்கப்படாத ஒன்று. இது இசுலாமிய பெண்களின் சம உறிமைக்கு எதிரானது. இசுலாமிய பெண்கள் சங்கமும், பெண்கள் சங்கமும் இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் போராடும்” என்றார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையிடம்  முத்தலாக் கூறிய கணவர்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

The husband said triple talaq to the teacher in front of the students

 

உத்தர பிரதேசம் மாநிலம், பெரோஷா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷகீல் (35). இவருக்கும் பாராபங்கி பகுதியைச் சேர்ந்த தமன்னாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்தில் முகமது ஷகீர் குடும்பத்தினர், தமன்னாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரிடம் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதனால், தமன்னா பாராபங்கியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

 

இந்த நிலையில், தமன்னாவின் கணவர் முகமது ஷகீர் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையில், தமன்னா பாராபங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய முகமது ஷகீர் தமன்னாவின் சொந்த ஊரான பாராபங்கிக்கு சென்றார். அதன் பின்னர், முகமது ஷகீர் தமன்னாவுடன் 6 நாள்கள் தங்கிவிட்டு தனது சொந்த ஊரான பெரோஷாவுக்கு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முகமது ஷகீர் மீண்டும் தனது மனைவியை தேடி பாராபங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது தமன்னா வீட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. மேலும், தமன்னா பணிக்காக பள்ளிக்கு சென்றுள்ளதாக தமன்னாவின் தாயின் மூலம் தெரிந்துகொண்டார். அதனால், முகமது ஷகீர் தமன்னா பணிபுரியும் பள்ளிக்கு சென்றார். அங்கு தமன்னா வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். நேரடியாக வகுப்பறைக்கு சென்ற முகமது ஷகீர், தமன்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் தமன்னாவிடம் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.

 

இதுகுறித்து, தமன்னா கோட்வாலி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முகமது ஷகீர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

இஸ்லாமிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய அமித்ஷா; ஒவைசி கடும் எதிர்ப்பு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Owaisi strongly condemned Amit Shah who spoke about Islamic reservation

 

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித்ஷா பேசியதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். 

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெலுங்கானா சென்ற போது, அங்கு நடந்த கட்சி கூட்டத்தில், “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி ஒவைசியிடம் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை மோடியே வைத்து இருப்பார்.

 

முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய இருக்கையை தக்கவைப்பதில் கவனம் செலுத்தட்டும். ஒருபோதும் பிரதமர் மோடியை தெலுங்கானா மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடையாமல் சந்திரசேகர் ராவின் அரசு தடுத்து வருகிறது. ஆனால், கண்டிப்பாக பாஜக தெலுங்கானாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என்றார். 

 

இது அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. அறிக்கையின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். சீனாவுடன் எல்லை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல் அமித்ஷா இஸ்லாமியர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.