Skip to main content

மூட்டை மூட்டையாக நாய்க்குட்டிகளின் சடலங்கள் - கொடூர சைகோவை தேடும் போலீஸ்!

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
d

 

கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரத்தக்கறையுடன் மூட்டைகள் கிடந்துள்ளன.  மருத்துவமனையில் பணிபுரியும் புதுல்ராய் சந்தேகத்துக்கு இடமான அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.   15 நாய்க்குட்டிகள் கொலை செய்யப்பட்டு அந்த  மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்தன.   மேலும்,  ஒரு மூட்டையில் ஒரு நாய் ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.  உடனே,  மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்க,  அவர்கள் உத்தரவின் பேரில் கால்நடைத்துறையில் இறந்துபோன நாய்க்குட்டிகளை பரிசோதனை செய்ததில்,  கட்டிப்போட்டு விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்து அதன் பின்னர் கொடூரமாக தாக்கியும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

 

மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு அந்த கொடூர சைக்கோவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாய் சடலம்; மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Dog carcass in drinking water tank; Again a sensational incident

ஒரு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு ஆண்டை கடந்து தற்பொழுது வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று பொது இடங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழ, அந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் இறந்த நாயின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆட்டையான் வளைவு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல குடிநீர் ஆபரேட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தண்ணீர் நிரம்பியுள்ளதா என்று சோதனை செய்தபோது அங்கு நாய் ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாரமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

17 பேரை கடித்த நாய்கள்; பேரூராட்சி எடுத்த நடவடிக்கை

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
17 people were bitten by dogs in Pudukkottai  municipal administration caught 50 dogs

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கடைவீதியில் மாலை நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் அம்புக்கோயில் முக்கத்தில் ஒரு வெறி நாய் அடுத்தடுத்து பலரைக் கடித்து குதறியது. ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குச் சென்றனர். 

அதே போலக் கறம்பக்குடி தென்நகர் பகுதியில் ஒரு நாய் வரிசையாக பலரை கடித்து குதறியது. இந்த இரு இடங்களிலும் 17 பேரை நாய்கள் கடித்து மருத்துவமனைக்கு வந்த போது மருத்துவமனை வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது. இதில் 12 பேரை மேல்சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே ஊரில் சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 பேரை நாய்கள் கடித்த சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில் பொதுமக்கள் கடைவீதிக்கு வரவே அச்சப்பட்டனர். இந்த நிலையில் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தெருவில் சுற்றிய நாய்களை பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பிடித்து சுமார் 70 நாய்களை சில வாகனங்களில் ஏற்றிச் சென்று வெளியூர்களில் விட்டுள்ளனர்.