Skip to main content

பெண்களை பாதுகாக்க அவசரகால  பட்டன்...

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

சில நாட்காளாகவே இரவு நேரங்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றன. இது சம்பந்தமாக ஒரு சில வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு ஒரு தீர்வை வடகிழக்கு ரயில்வே கொண்டுவர திட்டமிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ரயில் பெட்டிகளில் "அவரசரகால பட்டனை" பொறுத்தவுள்ளது. 

 

north eastern railways itroduce "panic button" in trains

 

 

 

இதுகுறித்து  வடகிழக்கு ரயில்வே  தலைமை  அதிகாரி சஞ்சய் யாதவ் கூறியது, “முன்பெல்லாம் ரயில் பெட்டிகளில் பெண்களுக்கு ஆபத்து என்றால் செயினை பிடித்து இழுப்பது, அவசர கால எண்ணிற்கு அழைப்பது என்று இருக்கும். அதைவிட இந்த பட்டனை அழுத்தி உதவி கேட்பது மிகவும் சுலபமான ஒன்று. மேலும் இந்த ‘அவசரகால பட்டன்’ பாதுகாப்பு அதிகாரியின் பெட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது. அழுத்தினால் உடனே உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும்.

அனைத்து பெட்டிகளிலும் வெவ்வேறு  வண்ணங்களில் இந்த பட்டன் பொருத்தப்படும் பெண்களின் பெட்டியில் ஜன்னல் பக்கத்தில் இது இருக்கும். அதுமட்டுமில்லாமல் பிளாட் ஃபார்ம்கள் போல பெண்களின் பெட்டிகளில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்படும். அதன் முலம் பெண்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும். யாராவது பெண்களிடம் தவறாக நடந்துகொண்டால்  ரயில்வே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர். இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த பட்டன் அனைத்து ரயில்களிலும் பொருத்தப்படும்"

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.