Skip to main content

விபரீத செல்ஃபியால் உயிரிழந்த புதுமண தம்பதி; காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த சோகம்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 Newly wed couple after botched selfie; It is a tragedy that an uninsured attempter also lost his life

 

அண்மையில் கர்நாடகாவில் அருவி ஒன்றில் ரீல்ஸ் வீடியோவிற்கு மாசாக போஸ் கொடுத்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கால் இடறி விழுந்து அருவியில் அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இதேபோல கேரள மாநிலத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக். இவருக்கும் நவுபியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அன்சில் என்ற உறவினரின் வீட்டிற்கு இருவரும் விருந்துக்காக சென்றுள்ளனர். இருவரும் விருந்தை முடித்துவிட்டு மாலையில் அங்கே ஏதேனும் இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

 

 Newlywed couple after botched selfie; It is a tragedy that an uninsured attempter also lost his life

 

அன்சில் குடும்பத்தினரும் உடன் துணையாக சென்றுள்ளனர். அப்பொழுது ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்த தம்பதிகள் இருவரும் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அதற்காக முயன்ற பொழுது இருவரும் தடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இருவரையும் காப்பாற்ற உறவினர் அன்சிலும்ல் ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடலைத் தேடினர். இறுதியாக மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது. செல்ஃபி எடுக்க முயன்று தம்பதி மட்டுமில்லாது, அவரைக் காப்பாற்றச் சென்ற உறவினரும் உயிரிழந்த சம்பவம் அங்கு  சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.