Skip to main content

கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான புதிய ஜிஎஸ்டி முறை அறிமுகமானது...!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

34-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான புதிய ஜிஎஸ்டி முறை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. 

 

real estate

 

இதற்கு முன்னதாக 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி நடந்தது. அதில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கு 1 சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
 

அதன்ப‌டி, பழைய வரி விகிதம் அல்லது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதம் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று‌ வரும் மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு குறைவான புதிய ஜிஎஸ்டியே நடைமுறைப்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயல‌ர் பாண்டே தெரிவித்துள்ளார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Minister moorthy warns GST registration will be disabled if fake bill is produced

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

The Tamil Nadu government is against the central government's decision

 

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (07.10.2023) 52வது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார்.

 

இந்தக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சிறு தானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது. அதன்படி சிறுதானிய மாவு உணவு தயாரிப்புக்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பதால் சத்தான உணவுப் பொருட்கள் மக்களைச் சென்றடையும். சத்தான உணவுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் கவனம் திரும்ப இந்த வரி குறைப்பு உதவும்” எனத் தெரிவித்தார்.

 

அதே சமயம் இந்தக் கூட்டத்தின் போது, மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “உயிர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது. உயிர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மேலும் சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரையை தமிழகம் ஏற்றுக்கொள்கிறது. சிறுதானிய பொருள் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் முடிவை ஏற்கிறோம்” எனத் தெரிவித்தார்.