Skip to main content

உயிருக்கு போராடிய குழந்தை - நோன்பைத் துறந்து காத்த இஸ்லாமிய இளைஞர்!

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த குழந்தைக்காக ரம்ஜான் நோன்பை கைவிட்ட இஸ்லாமிய இளைஞர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

 

Blood


 

பீகார் மாநிலம் தர்பங்கா நகரைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ராகேஷ்குமார் சிங். இவரது மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணிநேரங்களில் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதை அடுத்து, குழந்தையின் ரத்தவகையான ஓ நெகட்டிவ்வை உடனடியாக தயார் செய்தால் மட்டுமே குழந்தையை உயிருடன் மீட்கமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 

இதுதொடர்பாக ராகேஷ்குமார் சிங் எங்கு தேடியுன் குறிப்பிட்ட அந்த ரத்தவகை கிடைக்காததால், தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரான முகமது அஸ்பாக், தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
 

ரம்ஜான் பண்டிகை வரவிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக நோன்பு கடைபிடித்து வரும் முகமது அஸ்பாக், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பதற்காக நோன்பினைக் கைவிட முடிவு செய்துள்ளார். மேலும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் குழந்தைக்கு ரத்ததானம் தருவதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் நோன்பு கடைபிடிப்பது முக்கிய கடமைகளுள் ஒன்று என்பதால், உயிருக்கு போராடும் குழந்தைக்காக நோன்பினை கைவிட்ட முகமது அஸ்பாக் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார். 
 

சில தினங்களுக்கு முன்னர் பாட்னாவில் 8 வயது குழந்தையைக் காப்பதற்காக, ஜாவித் அலாம் எனும் இஸ்லாமிய இளைஞர் தனது நோன்பினைக் கைவிட்டது பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள்” - விஜய்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay ramzan wishes

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம் மற்றும் கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், சமூக வலைத்தளப்பக்கம் வாயிலாக ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

த.வெ.க எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் சார்பாக பகிர்ந்துள்ள பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.