Skip to main content

மோடி, யோகி இசுலாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல- பாஜக எம்பி

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
athwale


உபி முதல்வரின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அமலாக்கத்துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது: 
 

மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் சில இசுலாமியர்கள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால், இசுலாமியர்களும் பசுக்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இந்து-இசுலாமியர்கள் ஒற்றுமைதான் இந்தியாவை வலிமைப்படுத்தும். பிரதமர் மோடியும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் இசுலாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அயோத்தி பிரச்சனை தொடர்பாக இந்துக்களும், இசுலாமியர்களும் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”அமைச்சர் என்பதால் பெட்ரோல் விலையால் பாதிக்கப்படவில்லை”- ராம்தாஸ்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
ramdass


நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கு பெரும் பயமாக இருப்பது பெட்ரோல், டீசல் விலையின் ஏற்றம்தான். தினசரி அதன் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஏற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், ”நான் ஒரு அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பில்லை. என்னுடைய அமைச்சர் பதவியை இழந்தாலொளிய நான் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விலை உயர்வை குறைப்பது அரசாங்கத்தின் கடமை. மாநில வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம். மத்திய அரசாங்கம் விலை உயர்வை குறைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.