Skip to main content

'10 மணிக்கு திருமணம்... 12 மணிக்கு விவகாரத்து' வில்லங்கமான திருமண நிகழ்வு!

Published on 20/02/2020 | Edited on 21/02/2020

திருமணம் ஆன 2 மணி நேரத்தில் காதல் ஜோடி பிரிந்து சென்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மௌடகா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அதே கல்லூரியில் படித்த மாணவன் ஒருவரை காதலித்துள்ளார். அதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அந்த இளைஞர் மீது பெண் வீட்டு சார்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையம் சென்று அந்த புகாரை வாபஸ் வாங்கினார்.



மேலும் காதலரின் வீட்டுக்கு சென்ற அப்பெண் அவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திடீரென அங்கு வந்த அவரின் தந்தை அவரிடம் தனியாக பேசியுள்ளார். இதனால் மனம் மாறிய அந்த பெண் தான் அப்பாவோடு செல்ல இருப்பதாக தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் உன் விருப்பம் போல் செய் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். அந்த பெண்ணும் அவரின் தந்தையுடன் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் விவகாரத்து பெற இருப்பதாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்