Skip to main content

ஓடும் விமானத்தில் பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

urine

 

 

 

விமான பயணத்தின் பொழுது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம்  செய்துகொண்டிருந்த ஆண்  பயணி போதையில் அருகில் உள்ள பெண் பயணியின் மீது சிறுநீர்கழித்துள்ளார்.

 

urine

 

 

 

பாதிக்கப்பட்ட சிறுமியின் மகள் இந்திரா கோஷ் என்பவர் தனது தாய்க்கு விமானத்தில் ஏற்பட்ட இந்த மானபங்கத்திற்கு நீதிகேட்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் என் தாய் தனியாக விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார் அப்போது அருகில் இருந்த ஆசாமி குடிபோதையில் பேண்டின் ஜிப்பை அவிழ்த்து என் அம்மா அமர்ந்திருந்த இருக்கை மீது சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பாக விமானநிலைய கஸ்டமர் கேருக்கு போன் செய்து கேட்டாலும் சரியான பதில் அல்லது நடவடிக்கை இல்லை என கூறியுள்ளார்.

 

இதற்கு டிவிட்டர் மூலம் பதிலத்துள்ள மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் உடனே விளக்கமளிக்கவேண்டும் எனவும் அவருக்கு நேர்ந்த இந்த மோசமான நிகழ்வுக்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்