Skip to main content

மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ...!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மின் வாகனம் உற்பத்தி பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக் தனது புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை இன்று அறிமுகம் செய்கிறது. இது லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கக் கூடியது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

as

 

 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசு போன்ற காரணங்களால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றன. மின் வாகனங்கள், பேட்டரி சார்ஜ் வசதியடன் இயங்கக் கூடியது. 

 

இந்த பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும். ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 130 கி.மீ வரை இயங்கக் கூடியத் திறன்  வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதே சமயம் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 85 கி.மீ வரை இயங்கும். இதன் தொடக்கவிலை ரூ 1.36 இலட்சம் என தெரிகிறது. தற்போது இது பெங்களூர் மற்றும் ஹைதெராபாத் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இது விரைவில் இந்தியா முழுக்க பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் பெங்களூரில் இதற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்; புதுவை அரசு அதிரடி

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Meters mandatory for autos; puduchery govt

 

புதுச்சேரியில் ஆட்டோவிற்கு மீட்டர் பொருத்துவது கட்டாயம் என  அம்மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீட்டர் பொருத்தாத, வரையறுத்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோ உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்கள் 1.8 கிலோமீட்டருக்கு 35 ரூபாயும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களுக்கு மீட்டர் பொறுத்தப்படுவதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

திருடு போன 12 ஆட்டோக்கள் பறிமுதல்; அதிரடி காட்டிய போலீஸ் 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Police seized 12 stolen autos

 

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி பயணிகள் ஆட்டோ திருடு போவதாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், இன்று சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸார், பிள்ளையார் குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி விசாரணை செய்தபோது, ஆட்டோவை ஓட்டி வந்த மாதனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(38) என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த நிலையில் ஆட்டோவை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார்.

 

இந்த நிலையில் ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கோவிந்தராஜை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் தொடர் விசாரணை மேற்கொண்டதில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 12-ஆட்டோக்களைத் திருடியதாகவும், அந்த ஆட்டோக்களை கருகம்பத்தூர் பகுதியில் பதுக்கி வைத்து, ஆட்டோவின் நம்பர் பிளேட்டை மாற்றியும், புதுப்பித்தும் வேறு மாவட்டங்களில் விற்பனை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

 

இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்ட ஆட்டோகள் என 12 ஆட்டோக்களை பறிமுதல் செய்த வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினர் ஆட்டோ திருடிய கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.