Published on 25/03/2019 | Edited on 25/03/2019
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.