Skip to main content

லோக்பால் அமைப்பு: 5 ஆண்டுகளுக்கு பிறகு குழு அமைக்கப்பட்டு தலைவர் பதவியேற்பு...

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரா கோஸ் இன்ற (சனிக்கிழமை) காலை இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

 

lokpal panel appointed by president

 

கடந்த செவ்வாய்கிழமையன்று இந்தியாவின் முதல் லோக்பால் தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் எம். வெங்கையா நாயுடு மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைப்பு உருவாகியுள்ளது. இதில் நீதிபதி பினாக்கி சந்திராவை தவிர, நீதிபதி திலிப் பி. போசலே, நீதிபதி பி. மோகந்தி, நீதிபதி அபிலாஸ் குமாரி, நீதிபதி ஏ.கே. திரிபாதி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.மேலும் குழு உறுப்பினர்களாக தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங் மற்றும் ஐ.பி. கௌதம் ஆகியோர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லோக்பால் அமைப்பில் மூன்று உறுப்பினர்கள், ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர், நீதித்துறை மற்றும் நீதித்துறை அல்லாத உறுப்பினராக எட்டு பேர் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

30 ஆயிரம் ரூபாய் சம்பளம்; கோடியில் புரண்ட பெண் என்ஜினீயர்; போலீசார் அதிர்ச்சி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

madhya pradesh contract engineer hema meena issue

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பெண் பொறியாளர் ஒருவர் வீட்டில் நடத்திய சோதனையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களால் லோக் ஆயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மத்தியப் பிரதேச காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்த உதவி பொறியாளராக 2011 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் ஹேமா மீனா (வயது 34). இவரின் மாதச் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இவர் மீது கடந்த 2020 ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த புகார் மீது கடந்த வியாழக்கிழமை அவருக்கு சொந்தமான இடங்களில் மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

போபால் அருகே உள்ள பில்கிரியா என்ற இடத்தில் தனது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் சதுர அடி இடத்தில் கட்டப்பட்ட 40 அறைகள் கொண்ட பங்களாவில் ஹேமா மீனா வசித்து வருகிறார். இதன் மதிப்பு சுமார் 1 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த பங்களா முழுவதும் ஆடம்பர பொருட்கள் நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஒன்று மீட்கப்பட்டது. இது தவிர பங்களாவில் இருந்து இரண்டு லாரிகள் மற்றும் பல்வேறு சொகுசு வாகனங்களும் மீட்கப்பட்டன.

 

madhya pradesh contract engineer hema meena issue

 

மேலும் ஹேமா மீனாவின் பண்ணை வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அங்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள அரசு உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மதிப்புள்ள விவசாய உபகரணங்கள், விலை உயர்ந்த மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர அவரது பண்ணை வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பிட்புல், டாபர்மேன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இன நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மட்டுமின்றி பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 60 மாடுகளும் அங்கிருந்து மீட்கப்பட்டன. இந்த சோதனையில் அவரது வீட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரமானது நாய்களுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இது மட்டுமின்றி இவரது பண்ணை வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான பால் பண்ணை ஒன்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் இந்த ஆடம்பர வாழ்க்கை நிலையைக் கண்டு மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சோதனையானது மத்தியப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

இரத்தத்தை உறிஞ்ச நினைத்தவர்களுக்கு தற்காலிக வெற்றி; ராஜினாமா செய்த கேரள அமைச்சர்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

kt jaleel

 

கேரள மாநிலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ஜலீல். இவர் முறைகேடாக அரசு பதவியை தனது உறவினருக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, கே.டி.ஜலீல் மீதான புகாரை விசாரித்த லோக் ஆயுக்தா அமைப்பு, கே.டி.ஜலீல் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது என அறிவித்ததோடு, அவரை பதவி விலக அறிவுறுத்துமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனை வலியுறுத்தியது.

 

லோக் ஆயுக்தாவின் இந்த முடிவை எதிர்த்து கே.டி.ஜலீல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தான் கேரள முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தனது சமூகவலைதள பக்கத்தில் அவர், "எனது இரத்தத்தை உறிஞ்ச விரும்பியவர்களுக்கு, இது தற்காலிக வெற்றி. எனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். மூன்று மத்திய புலனாய்வு அமைப்புகள் சலித்தெடுத்து ஆய்வு செய்தும், தவறு செய்ததற்கான எந்த தடயத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பதை பொதுவாழ்க்கையில் கிடைத்த சிறந்த அங்கீகாரமாக பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.