Skip to main content

கேரள பந்த்... பேருந்துகள் உடைப்பு... பதற்றம்...

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

ss

 

கடந்த டிசம்பர் 25-ம் தேதி அன்று கேரளாவின் கோழிக்கோடு அருகில் உள்ள கொயிலாண்டிப் பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரம், நகரின் பெரிந்தல் மண்ணாவை ஏரியாவின் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்களும் சபரிமலை தரிசனத்திற்காகப் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அந்தசமயம் சன்னிதானத்திலிருந்த பரிவார் அமைப்புகள் மற்றும் பெண் எதிர்ப்பாளர்கள் ஆகியோர் சரண கோஷம் பாடி அவர்களைத் தடுத்தார்கள். ஆலயப் பிரவேசம் போக விடாமல் ஆர்ப்பாட்டம் நடத்த, பின் வாங்கிய போலீஸ் பிந்துவையும் கனகதுர்காவையும் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பினர். நாங்கள் மீண்டும் வருவோம் என்று அவர்கள் அப்போதே சொல்லிவிட்டுத்தான். போனார்கள். அது வழக்கமான பேச்சுத்தானே என்று சபரிமலை போராட்டக்காரர்கள் அலட்சியப்படுத்தவில்லை.

 

ஜன 1-ம் தேதி அன்று நள்ளிரவு சபரிமலை செல்வதற்கு வந்த பிந்துவும், கனகதுர்காவும், நிலக்கல்லில் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள். பக்தர்களைப் போன்று கருப்பு உடையில் வந்த அவர்களை, சீருடையில்லாத மப்டி போலீசார் பாதுகாப்புடன் இரவு 3.00 மணிக்கு சபரிமலை சன்னிதானத்திற்கு, ஆலய ஊழியர்கள் செல்லும் பாதை வழியாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த சமயம் அங்கிருந்தவர்கள் எதிர்ப்புக் காட்டவில்லையாம். 5 நிமிடம் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அப்போது நள்ளிரவு மணி 3.38க்கு, ‘அதிகாலை 1.30 மணிக்கு நாங்கள் பம்பை சென்ற பிறகு போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். பாதுகாப்பு தரா விட்டாலும், ஆலயம் செல்வோம் என்று சொன்ன பிறகே போலீஸ் பாதுகாப்புக்காக வந்தார்கள். அதன்பின் அங்குள்ள வி.வி.ஐ.பி.க்கள் பாதை வழியாக சென்றோம் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், 18 படி ஏறவில்லை. தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம்' என்றார் பிந்து.

 

ss

 

இதன் பின், இது பிரச்சனையாகலாம் என்பதால், போலீஸ் அவர்களை தங்களின் கஷ்டடியில் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கத் தொடங்கியிருக்கிறது. பெண்களின் ஆலயப் பிரவேசம் பற்றிய விஷயம் வெளியேறிய மறு நொடி, சபரிமலை போராட்டக்காரர்கள், பா.ஜ.க.வினர் பந்த் அறிவித்தார்கள். இன்று அதிகாலையிலேயே பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. கேரளாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கோட்டயம் நகரில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு எஸ்.ஐ, ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தனர். கொல்லம் நகரில் அரசு பேருந்துகள் கல்வீச்சில் நொறுக்கப்பட்டன. டயர்களில் தீவைத்து தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். கேரளாவில் பீதியும் பதற்றமும் பற்றியிருக்கிறது. கேரள பார்டர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.