Skip to main content

வாஜ்பாய் கவலைக்கிடம் - தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் 

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
Kejriwal request for volunteers


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர் விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், தனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.
 

 

 

இதுதொடர்பாக கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் நாகேந்தர் ஷர்மா கூறுகையில், வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள இந்த சூழலில், தனது பிறந்தநாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை! (படங்கள்)

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (25/12/2021) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

 

Next Story

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் வெளியீடு

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
Rupees



முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.