Skip to main content

10 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு ... அதிர்ச்சியில் கர்நாடக அரசு!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

jhk

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. 

 

இன்று மட்டும் கர்நாடகாவில் 10,913 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 9,613 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 5,61,610 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,269 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,18,851 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 114 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 9,789 பேர் பலியாகியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்