Skip to main content

கர்நாடகாவில் ஜூலை 26- ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

 

karnataka cabinet ministers meeting

 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா அடுத்தடுத்து சந்தித்த நிலையில் எடியூரப்பா கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். 

 

தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிகளவு வளர்ச்சி அடையாமல் இருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் எடியூரப்பா. அவரது தலைமையில் தற்போது கர்நாடகாவில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக டெல்லி தலைமைக்கு புகார்கள் பறந்தன. 

 

மேலும், எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சூழலில் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்தார். 

 

பா.ஜ.க.வின் கொள்கைப்படி, மூத்த தலைவர்கள் அரசுப் பதவிகளை ராஜினாமா செய்து, வேறு பொறுப்புகளுக்கு செல்கிறார்கள். அதன்படி, 79 வயதான எடியூரப்பாவும் விரைவில் முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 

 

எடியூரப்பா விலகல் மற்றும் புதிய முதலமைச்சர் நியமனம் ஆகியவை விஷயங்கள் திட்டமிட்டு கச்சிதமாக நடைபெற வேண்டும்என்று கட்சித் தலைமை விரும்புகிறது. எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக தனது மகன்களுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

சமீபத்தில் கர்நாடகா முதலமைச்சருக்கு நெருக்கமான ஆதரவாளராக கருதப்படும் சோபா மத்திய அமைச்சராக பதவியேற்றார். அதே சமயத்தில், மத்திய அமைச்சராக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த சதானந்த கவுடா  ராஜினாமா செய்துள்ளார். இதனால் கர்நாடகா மாநில அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் சென்று பா.ஜ.க.வின் தலைவர்கள் கருதுகிறார்கள். 

 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 26- ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மாநில அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற உள்ளது. 

 

இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம், கர்நாடகாவின் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.