Skip to main content

"370 வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம்"- மெகபூபா முப்தி பேட்டி!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

jammu and kashmir former chief minister Mehbooba Mufti pressmeet in delhi


டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று (24/06/2021) மாலை 04.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

 

ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, மாநில வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

 

பிரதமர் நரேந்திர மோடியுடனான ஜம்மு- காஷ்மீரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "மாதங்களோ, வருடங்களோ ஆனாலும் 370- வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம்; இது எங்களின் அடையாளம். கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதிக்கு பின் ஜம்மு- காஷ்மீர் மக்கள் நிறைய சிரமங்களில் உள்ளனர். ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முறையை தங்கள் மக்கள் ஏற்கவில்லை. சிறப்பு அந்தஸ்தை நாங்கள் பாகிஸ்தானிடம் இருந்து பெறவில்லை; அதை இந்தியா வழங்கியது" என்றார்.


 

சார்ந்த செய்திகள்