Skip to main content

கடைசி ஓவரில் கொல்கத்தா 'த்ரில்' வெற்றி: போட்டியில் இருந்து வெளியேறிய பெங்களூரு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

dgf


இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நான்கு அணிகள் தகுதிபெற்றது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த சென்னை, டெல்லி அணிகள் நேற்று மோதின. இதில் சென்னை அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வி அடைந்த டெல்லி அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோத உள்ளது. 

 

அதன்படி இன்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, கொல்கத்தா அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி இருவது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்து. அதைத் தொடர்ந்து விளையாட தொடங்கிய கொல்கத்தா அணி 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் அடுத்த ஆட்டத்தில் மோத உள்ளது. இதில் வெற்றிவெறும் அணி சென்னை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

 

சார்ந்த செய்திகள்