Skip to main content

இந்தியாவில் 17,265 பேருக்கு கரோனா!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116- லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519- லிருந்து 543 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302- லிருந்து 2,547 ஆக அதிகரித்துள்ளது.
 

 

 

 

india coronavirus strength increased union health ministry


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 223 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல் டெல்லியில் 2,003,, குஜராத்தில் 1,743, தமிழகத்தில் 1,477 ராஜஸ்தானில் 1,478, மத்திய பிரதேசத்தில் 1,407, உத்தரப்பிரதேசத்தில் 1,084, தெலங்கானாவில் 844, கேரளாவில் 402, ஆந்திராவில் 646, கர்நாடகாவில் 390, புதுச்சேரியில் 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்