Skip to main content

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக பயணி; விமானத்தில் பரபரப்பு சம்பவம்!

Published on 11/10/2024 | Edited on 11/10/2024
Incident happened to a woman by A passenger at flight

ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு கடந்த 9ஆம் தேதி இண்டிகோ விமானம் ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில், ராகேஷ் ஷர்மா என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். 

அப்போது, ராகேஷ் ஷர்மாவுக்கு முன்னால் ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த பாதிக்கப்பட்ட பெண், நடந்த சம்பவம் தொடர்பாக கேபின் குழுவினரிடம் ராகேஷ் ஷர்மா பற்றி புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த இண்டிகோ விமானம் சென்னைக்கு தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ராகேஷ் ஷர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணயில், ராகேஷ் ஷர்மா ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், பணி நிமித்தமாக ஜெய்ப்பூருக்கு சென்றதாகவும் தெரியவருகிறது. விமானத்தில், பெண்ணிடம் சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்