உள்ளாட்சி துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் - பாமக எச்சரிக்கை
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி துறை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் ஊதிய உயர்வு வழங்க கோரி 10 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ் தலைமையில், மாநில துனை அமைப்பாளர்கள் கணபதி, செல்வராசு, மண்டல துனை தலைவர் சிவராமன், மாநில தொழிற்சங்க தலைவர் ஜெயபால், மாநில மீனவர் சங்க தலைவர் உத்திராடம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது தன்ராஜ், "அரசு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், இல்லை எனில் அனைத்து அரசு ஊழியர்களை திரட்டி மிக பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைமையேற்று நடத்தும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
- சுந்தரபாண்டியன்