Published on 19/01/2019 | Edited on 19/01/2019

ஜப்பான் நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தனது கார்களின் விலையை ரூ 10,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதில் எஸ்.யூ.வி மாடல் ரூ. 10.000 வரை உயர்த்தப்போவதாகவும், மேலும் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களின் விலை ரூ. 7,000 வரை உயர்த்தப்போவதாகவும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்த விலை ஏற்றம் இருக்குமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.