Skip to main content

விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து; புகையால் மூச்சுத் திணறிய பயணிகள்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

A fire at the airport; Passengers suffocated by smoke

 

கொல்கத்தா விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் அச்சத்துடன் வெளியேறினர்.

 

கொல்கத்தா விமான நிலையத்தின் செக்கிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது விமானத்திற்காகக் காத்திருந்த பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புகை வெளியேறியதால் உள்ளிருந்த பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர். இதனையடுத்து சிறிய தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வழக்கம் போல விமானச் சேவைகள் நடைபெற்றது. இருப்பினும் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்