Skip to main content

இளைஞர் வேலைவாய்ப்பின்மை 25.5% ஆக உயர்வு!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022


 

Youth unemployment rises to 25.5%

 

கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலை வாய்ப்பின்மை 25.5% ஆக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

 

நாட்டின் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து 'பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ்' சர்வே வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021- ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதத்தில் 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% இருந்தது தெரிய வந்துள்ளது. 

 

அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5% ஆக இருந்தது. பெண்கள் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவீதத்தோடு காஷ்மீர் முதலிடத்திலும், 59 சதவீதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை 50%-க்கும் மேல் இருந்தது. 

 

நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் நீடித்தாலும், 2020- 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தின் 20.8 சதவீதத்தோடு ஒப்பிடுகையில், 2021- ஆம் ஆண்டின் அதே காலத்தின் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்