Skip to main content

மகன் செய்த கொலைக்குத் துணை நின்ற குடும்பத்தினர்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The family that supported the son's did illegal in delhi

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலங்கி. இவருக்கும், பூஜா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பூஜாவின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அதில் அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததில் பூஜாவின் கணவரான நீரஜ்ஜுக்கு பெருன் அதிருப்தியை தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பூஜா தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த பூஜா, ரோஹ்டக்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல விரும்பியுள்ளார். ஆனால் அவரது கணவர் நீரஜ் சோலங்கி, குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு காரில் பூஜாவை பின்தொடரும்படி கூறியுள்ளார். நீரஜ் தனது குடும்பத்தினருடன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு முன்சென்றுள்ளார். இதை நம்பி பூஜாவும் தனது சகோதரருடன் நீரஜ்ஜை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

இதனிடையே, நீரஜ் தனது காரை வேறு பாதைக்கு மாற்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நீரஜின் குடும்பத்தினர் புதைத்துள்ளனர். இதற்கிடையே, கார் வேறு பாதைக்கு சென்றவுடன் பூஜாவின் சகோதரர் நீரஜை செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால், அழைப்பு இணைக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த பூஜாவின் சகோதரர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, இரட்டை பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, பூஜா கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும், அந்த உடல்களை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு குடும்பத்தினரே உறுதுணையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்