Skip to main content

பால் தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டிருப்பார் - பட்னாவிஸ் பேச்சு!

Published on 02/01/2020 | Edited on 03/01/2020

மராட்டியத்தில் விரைவில் பஞ்சாயத்து சமதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றன. அதற்கான பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். பாஜக சார்பில் அம்மாநில முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தனது பிரச்சாரத்தில் சிவசேனாவை குறிவைத்து தாக்குகிறார்.



இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "சவார்க்கரை அவமதிக்கும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளோடு உத்தேவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளார். இதனை பால் தாக்கரே இருந்திருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் தற்போது சொர்க்கத்தில் அழுது கொண்டிருப்பார்" என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மராட்டியத்தில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்