Published on 25/06/2024 | Edited on 25/06/2024

வனப்பகுதிகளிலும் நிலப்பரப்பிலும் கம்பீரத் தோற்றமும், ஆளுமையும் கொண்ட விலங்காக திகழும் யானைகள் கூட்டம் கூட்டமாக ஆற்றைக் கடந்து செல்லும் அழகான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிலப்பரப்பிலும் வனப்பகுதியிலும் வாழ்ந்து வரும் யானைகள் அதன் பலத்தை நீரிலும் காட்ட முடியும் என உறுதி செய்துள்ளது அண்மையில் வெளியான ஒரு வீடியோ காட்சி. அசாமில் உள்ள பிரம்ம புத்திரா ஆற்றில் யானைகள் கூட்டமாக ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்திய படியும், தும்பிக்கையை உயர்த்தி நடந்த படியும் கூட்டமாக கடக்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகள் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.