Skip to main content

"ஆதார் நகலை யாரிடமும் கொடுக்காதீர்கள்"- மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! 

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

ஆதார் அட்டை தொடர்பாக, மக்களுக்கு புதிய அறிவுறுத்தல் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 

 

இது தொடர்பாக, மத்திய அரசின் மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்; அது தவறாகப் பயன்படுத்தக் கூடும். கடைசி நான்கு எண்களை மட்டுமே காட்டும் 'Masked' ஆதாரைப் பயன்படுத்தலாம். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் இ- ஆதாரை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆதார் நகலைப் பெறும் நிறுவனங்கள் அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்