Skip to main content

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி?

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Deputy Chief Minister and Ministers for BJP in NR Congress regime?

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று (07.05.2021) பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதையடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டமன்றத் தலைவராக நமச்சிவாயத்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். 

 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரசுக்கு மூன்று அமைச்சர்கள், பாஜகவுக்கு துணை முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம். ஓரிரு நாட்களில் அமைச்சரவை பொறுப்பேற்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரி மாநிலத்தை அனைத்து நிலையிலும் வளர்ச்சி அடைய பாடுபடும். தொழில், கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் போன்றவற்றில் முன்னேறுவதற்கும், மாநில மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்.

 

மாநில அந்தஸ்து உட்பட மாநிலத்திற்குத் தேவையானவற்றை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆலோசித்து செயல்படும். தென்மாநிலங்களில் முதலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தது. தொடர்ந்து இரண்டாவதாக புதுவையிலும் ஆட்சி அமைத்திருப்பது பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சி ஆகும். தமிழகத்திலும் தாமரை காலூன்றியுள்ளது. விரைவில் தெலங்கானாவிலும் பாஜக வளரும்” என்றார். இதனிடையே ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை எதிர்த்து, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.