Skip to main content

கிரிக்கெட்டில் சூதாட்டம்- அணியின் கேப்டன் கைது!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

கர்நாடக பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 வீரர்கள் கைது.


கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கடந்தாண்டு நடத்திய டி20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, பெல்லாரி கிரிக்கெட் அணியின் கேப்டன் சி.எம். கவுதம், அப்ரார் காஸியை கைது செய்தது கர்நாடக காவல்துறை. கைது செய்யப்பட்ட சி.எம்.கவுதம் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூதாட்டம் தொடர்பாக பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் விஸ்வநாதன், நிஷாந்த், பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தது காவல்துறை. 
 

Cricket captain gambled Karnataka premium league cricket


சூதாட்டதரகர் அணுகியதை கூறாததால் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு போட்டியில் பங்கேற்க 2 ஆண்டு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.


 

 

சார்ந்த செய்திகள்