Skip to main content

அறிகுறியே இல்லாத 186 பேருக்கு 'கரோனா'- கெஜ்ரிவால் வேதனை!! 

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

இந்தியாவில் 15,712 பேருக்கு கரோனா தொற்றுள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 488 லிருந்து 506 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2015ல் இருந்து 2230 ஆக அதிகரித்துள்ளது. 

 

'Corona' for 186 asymptomatic patients


இந்நிலையில் டெல்லியில் புதியதாக கரோனா உறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர். அறிகுறியே இல்லாத 186 பேருக்கு கரோனா உறுதியான விவகாரம் கவலையளிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 76 இடங்கள் கரோனா  பரவும் முக்கிய பகுதிகளாக இருப்பதால் டெல்லியில் ஏப்.20  தேதி ஊரடங்கில் எந்த தளர்வும்  இருக்காது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வு பற்றி ஏப்ரல் 27-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்