Skip to main content

சரியா- தப்பா? சர்ச்சைக்குள்ளான கிருகலட்சுமி பத்திரிகையின் அட்டைப் படம்!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

மலையாள பத்திரிகையான கிருகலஷ்மியின் மார்ச் மாத அட்டைப் படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அப்படி அதில் என்ன இருந்தது என்கிறீர்களா?

 

பெண்கள் பொது இடங்களில் தயக்கமில்லாமல் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக துபாயைச் சேர்ந்த ஜிலு ஜோசப் எனும் மாடல் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது. 

 

kerala

 


கூடவே கேரள தாய்மார்கள் சொல்வதுபோல், உற்றுப் பார்ப்பதை நிறுத்துங்கள். நாங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவேண்டும் என்ற வாசகமும் கீழே இடம்பெற்றிருந்தது.

 

அட்டைக்கு ஒரே நேரத்தில் வரவேற்பும் எதிர்ப்பும் வந்திருக்கிறது. வரவேற்பவர்கள், இதிலென்ன தப்பு நல்ல விஷயம்தானே என்கிறார்கள். யுனிசெஃப் இந்தியா அமைப்பு, நடிகை ஜெலினா ஜெட்லி உள்ளிட்டவர்கள் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். பெண்களின் மார்பகத்தை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆதரவுதெரிப்பவர்கள்.

 

அதேசமயம் எதிர்ப்பவர்கள், இது பத்திரிகை விற்பனைக்கான மலிவான உத்தி. பால் கொடுப்பதில் தவறில்லை. அதை சேலையால் மூடிக்கொண்டு செய்திருக்கலாம். ஒரு மாடலுக்குப் பதில்… அதுவும் தாய்மையை அடையாத மாடலுக்குப் பதில் நிஜ தாயையே பயன்படுத்தியிருக்கலாம். இப்படி திறந்துபோட்டு பாலூட்டுவது கலாச்சாரத்துக்கு எதிரானது என பலதரப்பட்ட குரல்கள் எழுந்திருக்கின்றன.

 

கேரளத்தைச் சேர்ந்த வினோத் மாத்யூ எனும் வழக்கறிஞர் கிருகலட்சுமி அட்டைப்படத்துக்கு எதிராக கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.