Skip to main content

அலெக்ஸாண்டரை தோற்கடித்த சந்திரகுப்தா - வரலாற்றை மாற்றிய யோகி ஆதித்யநாத்; விமர்சித்த ஒவைசி!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

 

yogi aditynath

 

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அலெக்ஸாண்டரை சந்திரகுப்தர் தோற்கடித்ததாக கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "சந்திரகுப்த மௌரியரின் பாரம்பரியம் சிதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டரை தோற்கடித்ததற்கான பெருமை அவருக்கு வழங்கப்படவில்லை. வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது! வரலாறு சந்திரகுப்த மௌரியரை ‘தி கிரேட்’ என்று கூறவில்லை. அது யாரை ‘தி கிரேட்’ என அழைக்கிறது? சந்திரகுப்தரிடம் தோற்றவரை ‘தி கிரேட்’ என அழைக்கிறது. அலெக்ஸாண்டரை ‘தி கிரேட்’ என அழைக்கிறார்கள். தேசம் ஏமாற்றப்பட்டது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் இதுகுறித்து மௌனம் சாதிக்கின்றனர்" என தெரிவித்தார்.

 

சந்திர குப்தர் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. ஆனால் பொதுவாக கி.மு. 323இல் அலெக்ஸாண்டர் இறந்ததற்குப் பிறகு, கிமு 321இல்தான் சந்திரகுப்தர் ஆட்சிக்கு வந்ததாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் அலெக்ஸாண்டரும், சந்திரகுப்தரும் போரில் சந்தித்துக்கொண்டதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. இந்தச் சூழலில் யோகி ஆதித்யநாத், அலெக்ஸாண்டரை சந்திரகுப்தர் தோற்கடித்ததாக கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

 

இந்தநிலையில், யோகி ஆதித்யநாத்தின் கருத்தை அசாதுதீன் ஒவைசியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துத்துவா ஒரு போலி வரலாற்று தொழிற்சாலை. சந்திரகுப்தரும் அலெக்சாண்டரும் போரில் சந்தித்ததில்லை. நமக்கு நல்ல பொதுக் கல்வி முறை ஏன் தேவை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. நல்ல பள்ளிகள் இல்லாத நிலையில், வசதிக்கேற்ப 'பாபா-லோக்' உண்மைகளை உருவாக்குகிறார்.  பாபா கல்வியை மதிப்பதில்லை என்பதை இது காட்டுகிறது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து; உ.பி. அரசு அதிரடி அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
UP Govt Action Announcement for Constable exam written by 50 lakhs cancelled

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். 

இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

பா.ஜ.க.வை வீழ்த்திய இந்தியா கூட்டணி! அதிர்ச்சியில் மோடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Samajwadi Party defeat BJP in Koshi constituency of Uttar Pradesh

 

உத்தரபிரதேசம், கேரளா உளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

 

அடுத்தாண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தியா என்ற அணியில் ஒண்றினைந்துள்ளன. இந்த நிலையில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் உ.பி மாநிலத்தின் கோஷி தொகுதி, மேற்கு வங்கம் துப்குரி தொகுதி, உத்தரகாண்டில் பாகேஷ்வர் தொகுதி, திரிபுரா மாநிலத்தில் தன்பூர் மற்றும் போக்ஸாநகர் தொகுதிகள், ஆகிய 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், மேற்கு வங்கம் மாநிலத்தில் துப்குரி தொகுதி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் கோஷி தொகுதி ஆகிய இரண்டிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற, திரிபுர மாநிலத்தில் தன்பூர் மற்றும் போக்ஸாநகர் ஆகிய 2 தொகுதி, மாநிலத்தில் பாகேஷ்வர் தொகுதி ஆகிய மூன்று இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

 

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளது அக்கட்சியின் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.  கோஷி தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தாரா சிங் சவுகான் இருந்தார். இவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும், சமாஜ்வாடி கட்சியின் சார்பாக நின்று வென்ற தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாகவே அந்தத் தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. 

 

இந்நிலையில், கோஷி தொகுதியில் சமாஜ்வாடியில் இருந்து சென்ற தாரா சிங் சவுகான் மீண்டும் பாஜக வேட்பாளராக களம் இறங்கினார். சமாஜ்வாடி கட்சி சார்பில் சுதாகர் சிங் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. வேட்பாளருக்காக அந்த மாநிலத்தின் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளருக்கு காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம். ஆகிய இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்திருந்தது. 

 

இந்த நிலையில், கோஷி தொகுதியில் பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் சுதாகர் சிங் தோற்கடித்தார். ஒரு மாநிலத்தின் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடித்து எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது ஆச்சரியமாக பார்க்கப்படும். அந்தவகையில் தற்போது கோஷி தொகுதியில் சமாஜ்வாடி வென்றுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, கோஷி தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பது சாதனை என்று சொல்லப்படுகிறது.