Skip to main content

லேட்டரல் என்ட்ரி; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - பின் வாங்கிய மத்திய அரசு

Published on 20/08/2024 | Edited on 20/08/2024
central government cancelled the lateral entry system

மத்திய அரசின் உயர் பதவிகளான இணைச் செயலர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது. பொதுவாக, இந்த பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதுதான் வழக்கம். ஆனால் தற்போது அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடத்தினால், தற்போது ஐ.ஏ.எஸ் முடித்துவிட்டு அதிகாரிகளாக வேலை பார்த்துவருபவர்கள் பிறகாலத்தில் மத்திய அரசின் உயர்பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) என்பது இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேசமயம், பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் கூட இந்த அறிவிப்புக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் நேரடி அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து யு.பி.எஸ்.சி அமைப்பின் தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில், “வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார். அதனால் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்