Skip to main content

கோடிகளைப் பதுக்கிய பிரபலங்கள்! உலகை உலுக்கிய பண்டோரா பேப்பரஸ்! 

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Celebrities who have amassed millions! Pandora Papers that rocked the world!

 

உலகத்தின் பல்வேறு நாடுகளில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அரசாங்கத்துக்கு வரி கட்டாமல் பல ஆயிரம் கோடிகளைப் பதுக்கி வைத்திருக்கும் விவகாரம் தற்போது வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

 

அரசுக்கு வரி கட்டாமல் கோடிகளைப் பதுக்கும் பெரிய புள்ளிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் கோடிகளையும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அம்பலமாகியிருப்பது உலகத்தை உலுக்கியிருக்கிறது. அதுகுறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக நிறுனங்களும் பத்திரிகையாளர்களும் இணைந்த புலனாய்வு அமைப்பு இந்த ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது. தலைசிறந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முறைகேடுகளைக் கண்டறிய துணைபுரிந்துள்ளனர்.

 

அறக்கட்டளைகள் பெயரில் பாகிஸ்தான் அமைச்சர்கள் பலரும் கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, கென்ய ஜனாதிபதி ஊஹூரு, சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ், ஈக்வாடார் ஜனாதிபதி கில்லர்மோ என பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் சொத்துக்கள் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

 

இதில் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல தொழிலதிபர் அம்பானி உள்பட 300க்கும் மேற்பட வி.வி.ஐ.பி.க்களின் கோடிகளும் இடம்பிடித்துள்ளன. இந்த ரகசிய ஆவணங்கள் கசிந்த நிலையில், பட்டியலில் இருக்கும் பலரும், தாங்கள் வெளிப்படையாகவும், சட்டத்திற்குட்பட்டும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

 

கரீபியன் தீவு பகுதிகளில் சச்சினும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை வாங்கியிருப்பதாக ரகசிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இதனை மறுத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் அறக்கட்டளை இயக்குநர் பிரின்மோய் முகர்ஜி, “வெளிநாடுகளில் சச்சின் டெண்டுல்கர் முதலீடுகள் செய்திருப்பது அனைத்தும் வெளிப்படையானவை. சட்டத்திற்குட்பட்டு முறையான வரிகள் செலுத்திய சொத்துக்கள் அவை. தவறுகள் ஏதும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

விராட் கோலி சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Sachin excited about Virat Kohli's feat

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

 

இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ரோல் மாடலும், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின், விராட் கோலியைப் பாராட்டியுள்ளார்.  தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தளத்தில் "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ சிறந்த வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

Sachin excited about Virat Kohli's feat

 

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட என்க்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ததும், மேலும் எனது சொந்த மைதானத்தில் இது நடந்தது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது”என பதிவிட்டுள்ளார்.