Skip to main content

மாட்டுக்கறி ... மீண்டும் ஜார்கண்ட்டில் பா.ஜ.க. வன்முறை!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
akni

 

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் இந்து மத அமைப்புகள் "மாட்டுக்கறி" என்கிற வன்முறை அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தேச ஒற்றுமைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளாக மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

மாட்டுக்கறி சாப்பிடுவதில் தவறு இல்லை என ஒரே ஒரு கருத்து மட்டும் சொன்னால் போதும் அந்த கருத்தை கூறியவர்களை தேடி கண்டுபிடித்து கொடூரமாக தாக்குவது வாடிக்கையாகிவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சமூக நல செயல்பாட்டாளர்  சுவாமி அக்கினிவேஷ். இன்று இவரை ஜார்கண்ட் அருகே பகூர் என்ற இடத்தில் வைத்து பா.ஜ.க.மற்றும் ஏ.பி.வி.பி. என்கிற இந்து மத அமைப்பினர் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர் ஒரு பொது நிகழ்வில் "மனிதர்களுக்கு உணவுப் பழக்கம் என்பது யாரும் கற்றுக் கொடுப்பதல்ல அல்லது இதுதான் உணவு என்று யாரும் தீர்மானிப்பதல்ல.. இறைச்சி சாப்பிடுவது மனித சமூகம் தோன்றியதிலிருந்து இருக்கிறது. அதே போல் தங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சாப்பிடலாம். அந்த வகையில் மாட்டுக்கறியை பிடித்த உணவாக சாப்பிடுபவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.." இப்படித்தான் பேசியிருக்கிறார். இதற்காகத்தான் மத தீவிரவாதிகள் பகூர் என்ற கிராமத்தில் வைத்து நூற்றுக்கணக்கானோர் கண்மூடித்தனமாக மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற சுவாமி அக்கினிவேஷ் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இதே ஜார்கன்ட் மாநிலத்தில் தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அன்சாரி என்பவரை மதவாத கும்பல் கொலை வெறியுடன் தாக்கி அவரை அடித்தே கொன்றது. இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. இக்கொலை செயலில் ஈடுபட்ட கொலையாளிகள் 7 பேர் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தனர். அந்த 7 கொலையாளிகளை வரவேற்று மாலையணிவித்து வாழ்த்து தெரிவித்தார் ஜார்கண்ட்டில் உள்ள மத்திய பா.ஜ.க.அமைச்சர் ஒருவர். மனிதர்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் எந்த மதமும் நுழைய இடமில்லையென்றும் மாட்டு கறி விஷயத்தில் சட்டத்திற்கு புறம்பாக யாரும் வன்முறையை கையிலெடுக்க கூடாது அப்படிப்பட்டவர்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கப்படும் என கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்றம் கூறியது.  இந்த நிலையில் இன்று மாட்டுக்கறி சாப்பிடுவது தவறில்லை என கூறியதற்காக சமூக செயல்பாட்டாளர் சுவாமி அக்கினிவேஷ் கடுமையாக மதவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார். என்பது சட்டமும், நீதியும் எங்களிடம் தான் என்கிற சர்வாதிகார குனத்தையே பிரதிபலித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ..” - இஸ்லாமிய மாணவியை டார்ச்சர் செய்த ஆசிரியர்கள்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

islam student torchered by teacher for beef in covai

 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்  ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து பள்ளி ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 

அவர் அளித்த அந்த மனுவில், ‘பள்ளி ஆசிரியை அபிநயா, அந்த மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளார்கள். அப்போது, இது குறித்து அவரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியை அபிநயா என்பவரும், ஆசிரியர் ராஜ்குமார் என்பவரும், தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டது குறித்து மாணவியிடம் கேள்விகள் கேட்டு, கன்னத்தில் அறைந்து மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ, அப்ப உனக்கு திமிர் அதிகமாகத் தான் இருக்கும் எனக் கூறி சக மாணவிகள் மத்தியில் மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் அனைவரின் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆகையால், மாணவியின் படிப்புக்கு இந்த ஆசிரியர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் இருப்பதாக கூறி’ தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியதாவது, “இங்கு தொடர்ந்து எனது குழந்தையிடம் மாட்டுக்கறி சாப்பிடுவியா? அப்ப திமிர் பிடித்த மாதிரி தான் நடந்து கொள்வீர்கள் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பி ஆசிரியர்கள் டார்ச்சர் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இருப்பினும், மீண்டும் இரண்டாவது முறையாக தலைமை ஆசிரியரிடம் அணுகிய போதும் கூட அப்பொழுதும் சரியான பதில் இல்லை. அதன் பின், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்த போது எங்களை சமாதானப்படுத்தி, இது போல் மீண்டும் நடக்காது என்றும் மீண்டும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புமாறும் கூறினர்.

 

அதன் பேரில், மீண்டும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய போதும் அதே மாதிரியான டார்ச்சர்களை அந்த ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.