Skip to main content

இந்த சி.டி.யில என்ன இருக்கு தெரியுமா? 120 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த சாமியார்!

Published on 21/07/2018 | Edited on 21/07/2018
Baba-Amarpuri


அரியானாவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
 

பாபா அமர்புரி என்ற அந்த சாமியாரை ஹிசார் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அவர், அதனை செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட பெண்களை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர்களிடம் பணம் பறித்தும் உள்ளார். 
 

 

 

இதுதொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, பாபா அமர்புரி கைது செய்யப்பட்டள்ளார். கைது செய்யப்பட்ட அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின்போது பல திடுக்கும் விஷயங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ஆனால் பாபா அமர்புரியோ, தான் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 
 

 



 

சார்ந்த செய்திகள்