Published on 19/10/2018 | Edited on 19/10/2018

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கோரவிபத்தில் ரயில் மோதி 50 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இதையடுத்து ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், ’’அமிர்தசரஸ் ரயில் விபத்து அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.